உள்ளூர் செய்திகள்

சேலத்தில் ஏ.டி.எம் மையத்தில்அபாய ஒலி அடித்ததால் பரபரப்பு

Published On 2023-07-16 13:29 IST   |   Update On 2023-07-16 13:29:00 IST
  • ஏற்காடு நெடுஞ்சாலையில் மத்திய சிறைச் சாலை எதிரே உள்ள இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது.
  • இந்த ஏ.டி.எம் மையத்தி லிருந்து காலை 9 மணி அளவில் அபாய ஒலி ஒலித்தது.

சேலம்:

சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில் மத்திய சிறைச் சாலை எதிரே உள்ள இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த ஏ.டி.எம் மையத்தி லிருந்து காலை 9 மணி அள வில் அபாய ஒலி ஒலித்தது. இதனால் ஏ.டி.எம் மையம் அருகே உள்ளவர்கள் இது தொடர்பாக சேலம் மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு அங்கு வந்த போலீசார் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ள பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

ஏ.டி.எம் மையத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார் களா? அல்லது எந்திர கோளாறா என சேலம் மாநகர அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர் அதேபோல் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News