உள்ளூர் செய்திகள்

ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.83 ஆயிரத்துக்கு தேங்காய் கொப்பரை ஏலம்

Published On 2023-07-08 14:26 IST   |   Update On 2023-07-08 14:26:00 IST
  • வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளை விக்கும் பல்வேறு பொருட்க ளையும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் இ.நாமில் இணைக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் பொருட் களை சந்தை படுத்த முடியும்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இந்திராநகரில் வேளாண் விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளை விக்கும் பல்வேறு பொருட்க ளையும் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடம் இ.நாமில் இணைக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் பொருட் களை சந்தை படுத்த முடியும்.

இந்த நிலையில், இ நாம் மூலம் தேங்காய் கொப்பரை பருப்பு மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில்,1.253 மெட்ரிக் டன் எடையுள்ள 39 மூட்டை கொப்பரை பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 12.53 குவிண்டால் அளவிற்கு இருந்த கொப்பரை பருப்பு 83 ஆயிரத்து 548 ரூபாய்க்கு வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

இதில், ஒரு கிலோ அதிக விலையாக 70 ரூபாய் 55 காசுக்கும், குறைந்தவிலை யாக 55 ரூபாய் 75 காசுக்கும், சராசரியாக 66 ரூபாய் 25 காசுக்கும் விற்பனை செய்யப் பட்டது. மற்ற இடங்களை விட ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப் பரை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படு கிறது. அதனால், கொப்பரை உற்பத்தியாளர்கள் ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.

அதேபோல பல்வேறு விளைபொருட்களையும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடை யலாம். தேசிய அளவில் வியாபாரிகள் பங்கேற்ப தால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இங்கு அதிகளவில் விவசாய விலை பொருட்களை இருப்பு வைப்பதற்கான இட வசதி உள்ளது.

மேலும், இங்கு இருப்பு வைக்கப்படும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஈட்டு கடன் வழங்கபடுகிறது. அதனையும் விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்று ஓமலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News