உள்ளூர் செய்திகள்

மொபட்டில் இருந்த ரூ.2 லட்சம் மாயம்

Published On 2023-07-09 12:55 IST   |   Update On 2023-07-09 12:55:00 IST
  • மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார்.
  • சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர், கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜா (வயது 55). இவர் நேற்று முன்தினம் மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார். அந்த பணத்தை, மொபட்டில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் பின்புற சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை. இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், கொளத் தூர் போலீசார் அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News