உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

Published On 2023-07-25 15:33 IST   |   Update On 2023-07-25 15:33:00 IST
  • ஜூலை மாதங்களில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய (தத்கல் தனித் தேர்வர்கள் உள்பட) தனிதேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன.
  • தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களா கவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சேலம்:

தமிழகத்தில் நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய (தத்கல் தனித் தேர்வர்கள் உள்பட) தனிதேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களா கவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து துணைத் தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வருகிற 1,2 ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News