உள்ளூர் செய்திகள்

சேலத்தில் ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2023-02-21 09:31 GMT   |   Update On 2023-02-21 09:31 GMT
  • சேலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, சூரமங்கலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
  • இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மதியழகன், விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

சேலம்:

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் மதியழகன் (வயது 35). இவருக்கு செல்வி (30) என்ற மனைவியும், வித்தின் தர்ஷன் (7) என்ற மகனும் உள்ளனர்.

மதியழகன் சேலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, சூரமங்கலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மதியழகன், விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மதியழகனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மதியழகன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், மதியழகன் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் பலரிடம் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தான் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News