உள்ளூர் செய்திகள்

பழைய இரும்பு குடோனில் பொருட்கள் தீ பிடித்து எரியும் காட்சி.

சேலம் அன்னதானப்பட்டியில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

Published On 2022-11-16 06:40 GMT   |   Update On 2022-11-16 06:40 GMT
  • குணசேகரன் நாடார் (வயது 58). இவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துக்காடு பகுதியில் உள்ளது.
  • இந்த குடோன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென தீ பிடித்து கரும்புகை குபு குபு என குடோனில் இருந்து வெளியே வந்தது.

சேலம்:

சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் நாடார் (வயது 58). இவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துக்காடு பகுதியில் உள்ளது.

தீப்பிடித்தது

இந்த குடோன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென தீ பிடித்து கரும்புகை குபு குபு என குடோனில் இருந்து வெளியே வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினர் மற்றும் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு குடோன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் குடோன் முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். இதனால் அக்கம், பக்கத்தில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

ரூ.2.50 லட்சம் மதிப்பு

இருப்பினும் குடோனுக்குள் இருந்த பழைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சேதமதிப்பு சுமார் 2.50 லட்சம் ரூபாய் இருக்கும் என உரிமையாளர் தெரிவித்தார். தீ விபத்து குறித்து போலீசார் விசாரனை நடத்தியதில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News