உள்ளூர் செய்திகள்

மகுடஞ்சாவடி அருகே உள்ள பாட்டப்பன் நகர் ஏரி மதகு உடைந்து நீர் வெளியேறி வருவதை படத்தில் காணலாம்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மேலும் 4 நாட்கள் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published On 2022-10-15 08:56 GMT   |   Update On 2022-10-15 08:56 GMT
  • இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • 4 நாட்கள் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சேலம்:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் நிலவும் வழி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை மேலும் 4 நாட்கள் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால்பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News