உள்ளூர் செய்திகள்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
- கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- அதன் தொடர்ச்சியாக இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது-
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று (18-ந் தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.