உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பயிற்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சார்பில் கட்டுமான பணி இடங்களில் விபத்தை தடுக்க பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

Published On 2023-03-08 14:11 IST   |   Update On 2023-03-08 14:11:00 IST
  • விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
  • சூப்பர் கிரிட்டிகல் தெர்மல் பவர் பிளாண்ட் வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு-பொறுப்பு) த.ச.சஜின் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்று வரும் சூப்பர் கிரிட்டிகல் தெர்மல் பவர் பிளாண்ட் வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இதில் அந்த கட்டுமான பணியிடத்தின் ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்களும், தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தூத்துக்குடி, டான்ஜெட்கோ செயற்பொறியாளர், பெல் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News