உள்ளூர் செய்திகள்

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

சின்னமனூர் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆர்.டி.ஓ ஆய்வு

Published On 2023-08-23 11:17 IST   |   Update On 2023-08-23 11:17:00 IST
  • அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமான இந்த பள்ளி கடந்த 1981-ம் ஆண்டு முதல் தேவேந்திரகுல உறவின்முறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது.
  • இந்த பள்ளிக்கு பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

சின்னமனூர்:

சின்னமனூர் ஆலமரம் அருகே கடந்த 1955-ம் ஆண்டு திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி புறம்போக்கு நிலத்தில் தொடங்கப்பட்டது. அரசு உதவிபெறும் கல்வி நிறுவனமான இந்த பள்ளி கடந்த 1981-ம் ஆண்டு முதல் தேவேந்திரகுல உறவின்முறை நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

இந்த பள்ளிக்கு பட்டா வழங்கக்கோரி உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ திருவள்ளுவர் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் கோப்புகளை விரிவாக பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது சின்னமனூர் வி.ஏ.ஓ மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News