உள்ளூர் செய்திகள்

விவசாயியிடம் ரூ.2 லட்சம் 'அபேஸ்'

Published On 2023-07-03 09:59 GMT   |   Update On 2023-07-03 09:59 GMT
  • மர்ம நபர் மொபட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை திருடிக்கொண்டு ஓடினார்.
  • அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதம்பை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 41 ) விவசாயி.
சம்பவத்தன்று பாலன் பட்டுக்கோட்டை பெரிய தெரு பகுதியில் உள்ள அரசு வங்கியில், தன்னுடைய கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் விவசாய தேவைக்காக எடுத்துள்ளார்.

தன்னுடைய மொபைட்டில் பணத்தை வைத்துகொண்டு புறப்பட்டார்.

அப்போது மேலும் கூடுதலாக பணம் தேவைப்பட்டதால், பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் முன்பு மொபைட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பணம் எடுத்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் சென்றுவிட்டு மீண்டும் வந்த போது, மர்ம நபர் மொபைட்டில் இருந்த ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை திருடி கொண்டு ஓடினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலன் திருடன்.. திருடன்.. என சத்தம் போட்டார்.

அதற்குள் அந்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து பாலன் பட்டுக்கோட்டை நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் வங்கியில் பாலன் பணம் எடுக்கச் சென்ற பொழுது மர்மநபர் ஒருவர் மாஸ்க் அணிந்தவாறு பின்புறம் வந்து நின்றுள்ளார்.

அதனை தொடர்ந்து பாலன் பணம் எடுத்ததை அறிந்த, அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மேலும் ஒரு நபருடன் சேர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று பணத்தை திருடி சென்றது பதிவாகியுள்ளது.

தொடர்ந்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News