உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடத்த மளிகை கடை

தூத்துக்குடியில் மளிகை கடையில் ரூ.1½ லட்சம் கொள்ளை

Published On 2023-01-03 08:59 GMT   |   Update On 2023-01-03 08:59 GMT
  • ராஜ்குமார் புதுக்கோட்டை பஜாரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
  • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 48). இவர் புதுக்கோட்டை பஜாரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று அதிகாலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளை யர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News