எம்.ஜி.ஆர். நகரில் வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி கைது
- கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த திருவிழாவின்போது மேளம் அடித்ததில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
- கோயம்பேட்டில் பதுங்கி இருந்த பரத்தை இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகர் அன்னை சத்யா நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த திருவிழாவின்போது மேளம் அடித்ததில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கத்தி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது திடீரென நாட்டு வெடிகுண்டு வீசிப்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். வெடிகுண்டு வீசிய ரவுடியான பரத் (வயது23) என்பவரை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பரத் தினமும் எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனை ஜாமீனில் கடந்த செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் அதன்பிறகு ரவுடி பரத் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோயம்பேட்டில் பதுங்கி இருந்த பரத்தை இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.