கொடைக்கானல் ரோஜா பூங்காவில் மலர்கள் கருகி கிடக்கும் காட்சி.
கொடைக்கானலில் பராமரிப்பு இல்லாததால் பாலைவனமாக மாறிய ரோஜா பூங்கா
- முறையான பராமரிப்பு இல்லாததாலும் பனியின் தாக்கத்தாலும் ரோஜா செடிகள் அனைத்தும் கருகி வருகிறது. மேலும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும்போது மலர்கள் இன்றி பாலைவனம் போல் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- மேலும் பனிப்பொழிவு அதிகமான நேரங்களில் மலர் செடிகளை பசுமை போர்வைகளை கொண்டு மூடி பனியின் தாக்கத்தால் மலர் செடிகள் பாதிப்படையாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் நுழைவுக் கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் எனவும் சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவுக்கு அடுத்தபடியாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக புதிதாக திறக்கப்பட்ட ரோஜா பூங்கா உள்ளது. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோஜா பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் இருந்து வந்தது.
தற்போது பனியின் தாக்கத்தாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இன்றி காய்ந்த செடிகளை கண்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பனியின் தாக்கத்தாலும் ரோஜா செடிகள் அனைத்தும் கருகி வருகிறது. மேலும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உள்ளே செல்லும்போது மலர்கள் இன்றி பாலைவனம் போல் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. செயல்பாடு இல்லாமல் உள்ளதால் குற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதுவாக ரோஜா பூங்கா அமைந்துள்ளது. மேலும் பனிப்பொழிவு அதிகமான நேரங்களில் மலர் செடிகளை பசுமை போர்வைகளை கொண்டு மூடி பனியின் தாக்கத்தால் மலர் செடிகள் பாதிப்படையாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் நுழைவுக் கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் எனவும் சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
மக்களின் மனம் கவர்ந்து வந்த ரோஜாபூங்கா தற்போது மலர்கள் இன்றி பாலைவனம் போல் இருப்பதால் உரிய பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.