உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் சாலையோரத்தில் திறந்து கிடக்கும் குழிகள்

Published On 2022-11-07 14:23 IST   |   Update On 2022-11-07 14:23:00 IST
  • சாலை ஓரத்தில் 2 மாதத்திற்கு முன்பாக கழிவுநீர் இணைப்புக்காக குழி தோண்டப்பட்டது.
  • சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி 21-வது வார்டில் மெயின் பஜார் சாலை ஓரத்தில் 2 மாதத்திற்கு முன்பாக கழிவுநீர் இணைப்புக்காக குழி தோண்டப்பட்டது. சாலை இணைப்பு கொடுத்த பின்பும் குழிகள் மூடப்படாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர், அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

Similar News