உள்ளூர் செய்திகள்

அருந்தவபுரத்தில் கப்பிகள் பரப்பிய நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை.

அருந்தவபுரத்தில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

Published On 2023-08-01 08:54 GMT   |   Update On 2023-08-01 08:54 GMT
  • வாகனங்களில் செல்லவோ முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
  • ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் சாலைப்பணி முடிக்கப்ப டாமலேயே அப்படியே கிடப்பில் உள்ளது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருந்தவபுரம் ஊராட்சியில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சமத்துவபுரம் பகுதியில் சாலைப்புதுப்பிக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த கப்பி சாலையை பெயர்த்து கருங்கல் ஜல்லிகள் பரப்பி உள்ளனர்.

ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் சாலைப்பணி முடிக்கப்ப டாமலேயே அப்படியே கிடப்பில் போடப்பட்டு ள்ளதால் கிராம மக்கள் சாலையில் நடந்து செல்லவோ வாகனங்களில் செல்லவோ முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலைப்பணி யை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News