உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதித்த பெண் மீட்பு.

திருத்துறைப்பூண்டி அருகே மனநலம் பாதித்த பெண் மீட்பு

Published On 2022-12-07 09:21 GMT   |   Update On 2022-12-07 09:21 GMT
  • நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு உரிய பாதுகாப்பிற்காகவும் மனநல சிகிச்சை, மறுவாழ்விற்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
  • முகவரியை கண்டறிந்து இவரது குடும்பத்தினரை வர வைத்து விரைவில் குடும்பத்துடன் சேர்த்து விடுவோம்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி கடைத்தெருவில் 10 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சரிவர உடை அணியாமல் சுற்றி திரிந்து கொண்டும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும் தொந்தரவு செய்து கொண்டு இருந்தார்.

இதனை அறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் நம்பிக்கை மீட்பு குழுவினர் சமூகப் பணியாளர் சக்தி பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைமீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு உரிய பாதுகாப்பிற்காகவும் மனநல சிகிச்சை, மறுவாழ்விற்காக கொண்டு வந்து சேர்த்தனர் .

இது பற்றி நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் கூறும்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குளிக்க வைத்து முடி சுத்தம் செய்து நல்ல உடைகள் அணிந்து உணவுகள் சரியாக கொடுத்து அவருடன் நன்கு அன்புடன் பேசிக்கொண்டு சிகிச்சை தொடர்ந்து செய்து வந்தால் முகவரியை கண்டறிந்து இவரது குடும்பத்தினரை வர வைத்து விரைவில் குடும்பத்துடன் சேர்த்து விடுவோம் என்றார்.

Tags:    

Similar News