உள்ளூர் செய்திகள்

ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

Published On 2022-12-02 09:04 GMT   |   Update On 2022-12-02 09:04 GMT
  • தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.
  • 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு காய்கறிகள், வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட கரும்பாலம் பகுதி அ.தி.மு.க வார்டு உறுப்பினர் நிரோஷா 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு காய்கறிகள், போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்து இருந்தார். நலத்திட்ட உதவிகளை கேத்தி பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி வழங்கினார்.

மேலும் கரும்பாலம் பகுதியில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு தேவைகளை வார்டு உறுப்பினர் நிரோஷாவிடம் கூறினர்.

அப்போது அவர்கள் மக்களுக்கு கழிப்பிடமோ குடிநீர், தெருவிளக்கு ஏதுவும் இல்லாமல் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், பலமுறை வீடு வசதி கேட்டு மனு வழங்கி இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.இது குறித்து வார்டு உறுப்பினர் நிரோஷா கூறும்போது, கரும்பால பகுதி மக்களின் அனைத்து அத்தியாவசிய அடிபடை தேவைகளும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.

Tags:    

Similar News