உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பெரிய கோட்டை ஊராட்சியில் மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு

Published On 2022-09-04 05:55 GMT   |   Update On 2022-09-04 05:55 GMT
  • பெரியகோட்டை ஊராட்சியில் மக்களின் கோரிக்கை ஏற்பு முகாம் நடைபெற்றது.
  • முகாமில் 200 மனுக்களை கிராம பொதுமக்கள் கொடுத்தனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் மக்களின் கோரிக்கை ஏற்பு முகாம் வட்டாட்சியர் முத்துசாமி தலைமையில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தர்மராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழிச்செல்வி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான காளியப்பன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், ஊராட்சி மன்ற துணைத்தவைவர், வார்டு உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் வீட்டுமனை பட்டா வீடு பராமரிப்பு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நிலம் வழங்க, கால்நடைகள் வளர்க்க உள்ளிட்ட 200 மனுக்கள் கிராம பொதுமக்கள் கொடுத்தனர்.

இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்களைக் கொண்டு மனுக்களின் மீதான தன்மையை பொறுத்து உடனடியாக இம்முகாமில் தீர்வு காணப்பட்டன. முகாமில் பெரிய கோட்டைஊராட்சி செயலர் சரவணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News