உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Published On 2022-12-22 12:24 GMT   |   Update On 2022-12-22 12:24 GMT
  • தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  • நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரில் இருந்து விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிக்கான நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 26-ந்தேதி காலை 8.30 மணியளவிலும், கட்டுநர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வருகிற 29-ந்தேதி காலை 8.30 மணியளவிலும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முன்பாக, தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை கோரும் சான்று உள்பட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News