உள்ளூர் செய்திகள்

இளைஞர் திறன் பயிற்சி விழா

Published On 2022-10-29 15:23 IST   |   Update On 2022-10-29 15:23:00 IST
  • கலெக்டர், எம்.எல்.ஏ பங்கேற்பு
  • 140 பேருக்கு கடன் ஆணை வழங்கினார்

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் தலைமை தாங்கினார்.

மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன், ஒன்றிய குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் முனியம்மாள் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இளைஞர் பயிற்சி ஆணை 32 பேருக்கு தனிநபர் தொழில் முனைவோர் கடன் 140 பேருக்கு 35 லட்சம் மதிப்பில் கடன் ஆணை வழங்கினார்கள்.

அப்போது, சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தகரகுப்பம் முனியம்மாள் பிச்சாண்டி, வெங்குப்பட்டு ராமன், புலிவலம் நதியாமதன்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மகளிர் திட்ட உதவி அலுவலர் அலமேலு நன்றி கூறினார்.

Tags:    

Similar News