உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் மீது கல் வீசியதாக வாலிபர் கைது

Published On 2023-07-31 07:58 GMT   |   Update On 2023-07-31 07:58 GMT
  • முன்பக்க கண்ணாடி உடைந்தது
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

வாலாஜாவை அடுத்த மருதாலம் கூட்ரோடு பகுதியில் கடந்த 28-ந் தேதி நெய்வேலியில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.கவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக திருத்தணியில் இருந்து வேலூர் நோக்கி செல்வதற்காக வந்த அரசு பஸ் மீது கற்கள் வீசப்பட்டது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில் பஸ்மீது கல் வீசி தாக்கியதாக ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரியை சேர்ந்த மணிவண்ணன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News