உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி தொழிலாளி பலி

Published On 2023-10-14 13:22 IST   |   Update On 2023-10-14 13:22:00 IST
  • ரெயில்வே போலீசார் உடலை மீட்டனர்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே இன்று காலை உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்தனர்.

விசாரணையில் அரக்கோணம் கிரிவல்ஸ் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(வயது 43). என்பதும், இவர் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இவர் வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக இன்று காலை தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News