உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாமை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்த காட்சி.

நெமிலியில் மகளிர் உரிமைத்தொகை முகாம்

Published On 2023-07-27 08:18 GMT   |   Update On 2023-07-27 08:18 GMT
  • அமைச்சர் ஆர்.காந்தி திடீர் ஆய்வு
  • காலதாமதங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் நெமிலி,வேட்டாங்குளம், நெடும்புலி,பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காண விண்ணப்பம் பதிவேற்றும் முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது இதுவரை இணையத்தில் பதிவேற்றம் செய்த விவரங்கள் குறித்தும், பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள், காலதாமதங்கள் ஏற்படு வதற்கான காரணங்கள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் மகளிர் உரிமை தொகை படிவங்களை உரிய நேரத்தில் விடுபடாமல் அனைத்து விபரங்களையும் பதி வேற்றம் செய்யப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, சப் -கலெக்டர் பாத்திமா, நெமிலி தாசில்தார் பாலசந்தர், நெமிலி சேர்மன் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாதேவி (நெமிலி), கவிதா (பனப்பாக்கம்), லதா (காவேரிப்பாக்கம்), உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News