உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து பெண் பலி

Published On 2023-04-09 09:09 GMT   |   Update On 2023-04-09 09:09 GMT
  • தூங்கிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

ராணிப்பேட்டைமாவட்டம் அரக்கோணம் அடுத்த அமீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவ ரது மனைவி நதியா (வயது 35). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச் சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையிலும், பின் னர் அங்கிருந்து மேல் சிகிச் சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க் கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நதியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News