உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண்

Published On 2023-08-31 09:33 GMT   |   Update On 2023-08-31 09:33 GMT
  • வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்
  • போலீசார் விசாரணை

கலவை,

ஆற்காடு அருகே தாழனூர் இந்திராநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிடமேஸ்திரி. இவரது மனைவி மகேஸ்வரி(வயது 39).கண்பார்வை குறைபாடு உடையவர் என கூறப்படுகிறது.

வீட்டின் அருகே உள்ள தொட்டியில் தண்ணீர் எடுக்க மகேஸ்வரி சென்றார்.

அப்போது கால் தவறி தொட்டியில் விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News