உள்ளூர் செய்திகள்

காவேரிப்பாக்கத்தில் வாரசந்தை ஏலம்

Published On 2023-02-09 16:07 IST   |   Update On 2023-02-09 16:07:00 IST
  • காரசார வாக்குவாதத்தால் வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வாரச்சந்தை செயல்பட்டுவருகிறது.

30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் இச்சந்தைக்கு வருகின்றனர். இந்த சந்தையின் குத்தகை ஏலம் நேற்று பேரூராட்சி செயலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பின்பு அரசு நிர்ணயித்த ஏலத்தொகை அதிகமாக உள்ளதாக கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

இதனால் ஏலம் நிறுத்தப்படுவதாக பேரூராட்சி செயலர் சரவணன் அறிவித்தார். இந்த ஏலத்தின்போது எந்தவிதமான பிரசினையும் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சப் இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News