உள்ளூர் செய்திகள்

வன்னியர் சங்க பொதுக்கூட்டம்

Published On 2023-10-02 12:55 IST   |   Update On 2023-10-02 12:55:00 IST
  • நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

வாலாஜாவில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் பஸ்நிலையத்தில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு வாலாஜா நகர பா.ம.க.செயலாளர் எல்.ஞானசேகர் தலைமை தாங்கி பேசினார்.

வாலாஜா தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ரவி, வாலாஜா நகர தலைவர் நரேஷ் உள்பட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் ரஜினி சக்கரவர்த்தி வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில செயலாளர் தி.க.ராஜா, பா.ம.க. மாவட்ட செயலாளர் ப.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மாவட்ட பொருளாளர் ஞானசவுந்தரி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மணிவண்ணன், மாவட்ட தலைவர் லட்சுமணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வாலாஜா வடகிழக்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி நன்றிகூறினார்.

Tags:    

Similar News