உள்ளூர் செய்திகள்
கருணாநிதி நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வேண்டும்
- உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க வலியுறுத்தல்
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை யொட்டி வருகிற 7-ந்தேதி காலை 9 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வட்ட கிளைகள் தோறும் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.
இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.