உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கிட்டு சாவு

Published On 2023-02-02 09:46 GMT   |   Update On 2023-02-02 09:46 GMT
  • குடும்ப தகராறில் விபரீதம்
  • போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே நவ்லாக் புளியங்கண்ணு கோடதாப்பு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டியப்பா (46) சிப்காட் தொழிற் பேட்டையில் கூலி வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி சரிதா (35) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான குட்டி யப்பா, குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது.

இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பினர்.அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பால் போடப்பட்டிருந்து.

பலமுறை கதவை தட்டியும் திறக்கததால் சந்தேகம் அடைந்த சரிதா மற்றும் மகன்கள், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது குட்டியப்பா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சிப்காட் போலீசார்வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News