உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் மனைவிக்கு குழந்தை பிறந்தது

Published On 2022-10-26 15:48 IST   |   Update On 2022-10-26 15:48:00 IST
  • பிரசவம் பார்த்த பெண்போலீசுக்கு பாராட்டு
  • முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதி

அரக்கோணம்

திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை செய்து வருபவர் அஸ்வின் குமார். இவரது மனைவி சாந்தினி (வயது 29). நிறைமாத கர்ப்பிணியான அவரை சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனைக்கு பிரசவத் துக்காக நேற்று முன்தினம் மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அஸ்வின் குமார் அழைத்துச்சென்றார்.

ரெயில் அரக்கோணம் அருகே வந்தபோது சாந்தினிக்கு பிரசவவலி அதிகமானது. இது குறித்து அஸ்வின் குமார் உடனே அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ரெயில் அரக்கோணம் வந்தடைந்ததும் அங்கு தயாராக இருந்த பெண் போலீசார் சாந்தினியை இறக்கி பெண்கள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெண் போலீஸ் பரமேஸ்வரி உதவியுடன் சாந்தினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதைத் தொடர்ந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சாந்தினி மற்றும் பிறந்த ஆண் குழந்தையையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரசவத்திற்கு உதவியாக இருந்த அரக்கோணம் ரெயில்வே பெண் போலீஸ் பரமேஸ்வரியை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News