உள்ளூர் செய்திகள்

மழை பெய்து தண்ணீர் தேங்கியுல்ல காட்சி.

மழை வெள்ளத்தில் நெற்பயிர்கள் மூழ்கின

Published On 2022-07-26 09:24 GMT   |   Update On 2022-07-26 09:24 GMT
  • விடிய விடிய பரவலாக பெய்தது
  • விவசாயம் பாதிப்பு

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவேரிப்பாக்கம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென பலத்த மழை பெய்தது.

இரவு முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது இந்நிலையில் தொடர்ந்து காலை முதலே மழை பெய்து வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆடி மாதத்தில் பெய்துவரும் கனமழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக மழையால் சிரமபட்டனர்.

Tags:    

Similar News