உள்ளூர் செய்திகள்

விவசாயியை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Published On 2022-12-22 10:08 GMT   |   Update On 2022-12-22 10:08 GMT
  • நிலத்தகராறில் முன்விரோதம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

கலவை அடுத்த கன்னிகாபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 40). இவருக்கும் பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணா துரை (55). என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு அண்ணாதுரை நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அப்போது, அவருக் கும், அண்ணாதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணாதுரையின் கை மற்றும் கால்களில் வெட்டி உள்ளார்.

இதில் காயம் அடைந்த அண்ணா துரையை மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வாழை ப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து தலை மறைவாக இருந்த லோகநாதனை தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மா ம்பாக்கம் பஸ் நிலையம் அருகே நின்றிருந்த லோகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News