உள்ளூர் செய்திகள்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தைப்பூச விழா
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம
ஆற்காடு:
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு சனிக்கி ழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, வள்ளி - தேவசேனா உட னுறை சுப்பிரமணிய சுவாமிக்கு வாசனை திரவி யங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. சுவாமிக்கு மகா தீபாராதனை நடை பெற்றது.
தொடர்ந்து பகல் உச்சிகால பூஜையும், மாலையில் ஏக தின லட்சார்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில், உபயதாரர்கள், ரத்தினகிரி மற்றும் சுற் றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.