உள்ளூர் செய்திகள்

பைக் விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-10-31 15:47 IST   |   Update On 2022-10-31 15:47:00 IST
  • அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
  • போலீசார் விசாரணை

சோளிங்கர்:

ராணிப்பேட்டைமாவட்டம் அரக்கோணம் முதூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சோளிங்கரில் இருந்து முதூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். தாளிக்கால் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News