- தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்கா ட் வ.உ.சி நகர் 4-வது தெரு வை சே ர்ந்தவர் அனீப்.
இவரது மகன் சையத் (10). சிப்கா ட்டில் உள்ள அரசி னர் பள்ளி யில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது நண்ப ர்களுடன் மணியம்பட்டு பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான்.
அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி விட்டார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர்.
பல மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் இன்று காலை சிறுவனை பிணமாக மீட்டனர். மேலும் சையது உடலை போலீ சார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.