உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான வினாடி வினா போட்டி

Published On 2023-01-12 10:03 GMT   |   Update On 2023-01-12 10:03 GMT
  • வாணியம்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  • வருகிற 25-ந் தேதி பரிசு வழங்கப்பட உள்ளது.

வாணியம்பாடி:

தேசிய வாக்காளர் தின விழாவினை முன்னிட்டு மாநில தலைமை தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்ட இணைய வழியிலான வினாடி வினா போட்டியில் மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் முதல் பரி சை வென்றுள்ளது.

இதில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 9 ம் வகுப்பு மாணவர் சாரதி மாநிலத்திலேயே முதல் இடமும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காவியா தர்ஷினி இரண்டாவது இடமும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கோகன் ஸ்ரீபிரசாந்த் மூன்றாவது இடமும் பெற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதி அன்று சென்னையில் நடைபெறும் நிகழ்சியில் பாராட்டி பரிசு வழங்கப்பட உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப்-கலெக்டர் வில்சன் ராஜசேகர் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் மாணவர்களை தலைமையாசிரியர் எஸ். தமிழரசி, உதவி தலைமையாசிரியர் எஸ்.குமரேசன், பொறுப்பாசிரியர் கே.சதிஷ்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News