உள்ளூர் செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை குறித்து கருத்தரங்கு

Published On 2023-08-27 08:46 GMT   |   Update On 2023-08-27 08:46 GMT
  • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
  • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பாலசம் அகடமி இணைந்து, திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சி விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பல்ராம் மெமோரியல் டிரஸ்ட் பொருளாளர் சுந்தர் தலைமை தாங்கினார்.

பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

முன்னதாக மகளிர் குழுவினர் அமைத்திருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களில் தயாரித்த பொம்மைகள், மற்றும் மக்கும் குப்பைகள்,மறுசூழற்சி குப்பைகள்,மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யமுடியாத பொருட்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.

இதில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ், திடக்கழிவு மேலாண்மை வல்லுநர் ராஜசேகர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் காவேரி ப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், அம்மூர், திமிரி, விளாம்பாக்கம், கலவை உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News