உள்ளூர் செய்திகள்

மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

Published On 2023-03-19 09:06 GMT   |   Update On 2023-03-19 09:06 GMT
  • வருவாய்த் துறையினர் சோதனையில் சிக்கியது
  • போலீசார் விசாரணை

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த அன்வர்திக்கான்பேட்டை பகுதி யில் ஏரி புறம்போக்கு இடத்தில் இருந்து மண் எடுத்து செங் கல் சூளைக்கு பயன்படுத்தி வருவதாக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிற்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அந்த வழியாக மினி லாரியில் மண் கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் மினி லாரியை அங் கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் மினி லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத் தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News