உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி பலாத்காரம்

Published On 2023-08-19 13:45 IST   |   Update On 2023-08-19 13:45:00 IST
  • வாலிபர் போக்சோவில் கைது
  • ெஜயிலில் அடைத்தனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 20)என்ற வாலிபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு சிறுமி தனியாக இருந்தபோது லோகேஸ்வரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து ள்ளார். மேலும் இதே போல் பலமுறை உல்லாசமாக இருந்து விட்டு தற்போது திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நேற்று ராணி ப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லோகேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ெஜயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News