உள்ளூர் செய்திகள்
- டிப்பர் லாரி பறிமுதல்
- போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட் டம், நெமிலி அருகே உள்ள சிறுணமல்லி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத் தில் இருந்து மண் கடத்துவ தாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
நெமிலி தாசில்தார் பாலசந்தர் உத்தர வின் பேரில் தலைமையிடத்து துணை தாசில்தார் பன்னீர் செல்வம், வருவாய் ஆய்வா ளர் கனிமொழி ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் வருவதை கண்ட வுடன் மண் கடத்தலில் ஈடு பட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து அதிகாரி கள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, நெமிலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.