உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும்

Published On 2023-11-07 09:18 GMT   |   Update On 2023-11-07 09:18 GMT
  • சிறு, குறு தொழில் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு
  • பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்

ராணிப்பேட்டை:

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டையிலும் நேற்று மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் சந்திரகாசன், செயலாளர் முரளி, துணைத் தலைவர் புனித வேல், பெல் அன்சிலரி அசோசியேசன் தலைவர் வாகிசன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் அமைச்சர் ஆர்.காந்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு , சோளிங்கர், அரக்கோணம் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏக்களையும் நேரில் சந்தித்து கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் கூட்டமைப்பில் உள்ள பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News