உள்ளூர் செய்திகள்
கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
- தீய ணைப்பு வீரர்கள் மீட்டனர்
- காப்புக் காட்டில் விட்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கேசவன்குப்பம் கிராமத்தில் 30 அடி ஆழ விவசாயக்கிணற்றில் புள்ளிமான் விழுந்து கிடந்தது.
இது குறித்து வனச் சரகர் துரைமுருகன் சோளிங்கர் தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சிவகுமார் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் சம்மந்தப் பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 30 அடி ஆழ முள்ள கிணற்றில் இருந்து அரை மணிநேரம் போராட் டத்திற்கு பிறகு 2 வயது மதிக் கத்தக்க ஆண் புள்ளிமானை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த புள்ளிமானை வனத்துறையினர் அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர்.