உள்ளூர் செய்திகள்

அரக்கோணத்தில் மீன் கடைகள் அகற்றம்

Published On 2023-07-06 08:09 GMT   |   Update On 2023-07-06 08:09 GMT
  • புதிய மார்க்கெட் கட்டப்படுவதால் நடவடிக்கை
  • வியாபாரிகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்

அரக்கோணம்:

அரக்கோணத்தில் உள்ள மார்க்கெட் மிகவும் பழைய கட்டிடங்களில் இயங்கி வருகிறது.

கட்டிடத்தின் தன்மை மற்றும் நெரிசல் ஏற்படுதன் காரணமாக அந்தக் கட்டிடத்தை அகற்றி புதியதாக மார்க்கெட் கட்ட அரக்கோணம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் கடைகளை அகற்றுவது குறித்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலில் வியாபாரிகள் பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் ஏ.டி.எஸ்.பி கிரிஷ் யாதவ் அசோக் மற்றும் நகர மன்ற தலைவர் லட்சுமி ஆகியோர் தலைமையில் மார்க்கெட் வியாபாரி களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

அப்பொழுது புதிய மார்க்கெட் கட்டுவதற்கு வியாபாரிகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். நகராட்சி நிர்வாகம் அதை ஏற்றுக் கொண்டதால் புதிய மார்க்கெட் கட்ட வியாபாரிகள் சம்மதித்தனர்.

இந்நிலையில் முதலில் யார் கடையை அகற்றுவது என்ற கேள்வி எழுந்த நிலையில் மீன் வியாபாரிகள் தானாக முன்வந்து சுமார் 16 கடைகளை அகற்றினர்.

தானாக முன்வந்து கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்ட மீன் வியாபாரிகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News