சந்தைப்படுத்தலுக்கு வட்டாரம் வாரியாக பொருட்கள் தேர்வு
- மதிப்பு கூட்டலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித் துள்ளவாறு, மாவட்டந்தோ றும் மகளிர் சுய உதவிக் குழுக் கள் உற்பத்தி செய்திடும் பொருட்களை மதிப்பு கூட் டுதல், சந்தைப்படுத்துதல் மற் றும் அதிக சந்தை செய்து தருதல் போன்றவை மேற் கொள்ள ஒவ்வொரு வட்டா ரத்திலும் ஒரு பொருளை கலெக்டர் தேர்வு செய்து 2023-2024-ம் ஆண்டில்மேம்ப டுத்திடவும், பொதுவான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் தேவைப்படும் மதிப்பு கூட்டலுக்கான வாய்ப்பு களை ஏற்படுத்துவதற்கான இடவசதிகள், உற்பத்தி செய் திடும் ஒரு பொருளை தேர்வு செய்திடல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத் தில் அரக்கோணம் லுங்கி, ஆற்காடு இயற்கை தேன், காவேரிப்பாக்கம் பாக்கு மட்டை, நெமிலி புடவை, சோளிங்கர் ஊறுகாய், மசாலா தூள், திமிரி மஞ்சள், வாலாஜா சணல் பை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.