உள்ளூர் செய்திகள்

சிவன்கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2023-09-13 09:36 GMT   |   Update On 2023-09-13 09:36 GMT
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
  • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

முன்னதாக நந்தி பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News