உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி முதியவர் சாவு

Published On 2023-02-01 10:13 GMT   |   Update On 2023-02-01 10:13 GMT
  • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

விருதுநகர் ரோசாப்பட்டி முருகன் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). இவர் வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமம் முசிறி சந்திப்பு சாலையில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந் தார். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டபின் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News