உள்ளூர் செய்திகள்

கலவை பேரூராட்சியில் நிலவேம்பு குடிநீர் வினியோகம்

Published On 2023-09-02 09:19 GMT   |   Update On 2023-09-02 09:19 GMT
  • வீடு, வீடாக சென்று வழங்கினர்
  • தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கலவை:

ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

மேலும் இந்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பேரூராட்சி செயல் அலுவலர்(பொறுப்பு)முத்து உத்தரவின் பேரில் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அரங்கநாதன் தலைமையில் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்கினர்.

அப்போது, டெங்கு கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News