உள்ளூர் செய்திகள்
- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- பலர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் ரூ.6 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய மார்க்கெட்' கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட கலெக்டர் வளர்மதி அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்மு கசுந்தரம், நகர மன்றத் தலைவர் லட்சுமி பாரி, துணைத்த லைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி ஆணையர் ரகுராமன் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.