உள்ளூர் செய்திகள்

ரோப் கார் திட்ட பணிகளை அமைச்சர் காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆய்வு

Published On 2023-03-26 14:21 IST   |   Update On 2023-03-26 14:21:00 IST
  • விரைந்து முடிக்க உத்தரவு
  • டோலித்தொழிலாளர்கள் அரசுப்பணி கேட்டு மனு

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் சுவாமி கோவிலில் ரோப்கார் அடிப்படை வசதிகள் ரூ.11 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, எம்.பி.ஜெகத்ரட்சகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட டோலித்தொழிலாளர்கள் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு முதியோர்களை டோலி மூலம் தூக்கி சென்று வருகிறோம் அதில் கிடைக்கும் வருவாய் தான் எங்களுக்கு வாழ்வாதாரம்.

ரோப்கார் இயங்கும் போது தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே அரசுப்பணி வழங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

கோவில் உதவியாளர் ஜெயா, திமுக மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட விவசாய அணி வெங்க டேசன், கொண்டபாளையம் ஆனந்தன், கோபி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News